Thursday, 18 March 2021

சமச்சீர் கல்விப் பயணம்

சமச்சீர் கல்விப் பயணம் : 5

இதன் முந்தைய 4 பகுதிகளை ஏப்ரல் மாதமே எழுதினேன். அவற்றின் விளைவாக எனது மாணவர்கள் 20 வருடம் முன்பு படித்தவர் உட்பட பலர் என்னைத் தொடர்பு கொண்டனர் .அவர்களை இணைத்து ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கி உரை


முதன்முதலாக பயிற்சிக் கட்டகத்தில் எனது பெயர் வந்ததை பெருமையாக நினைத்த காலம் அது. அதிலெல்லாம் பெருமைப்படக் கூடியது ஒன்றும் இல்லை என்பதை பின்னாட்களில் புரிந்து கொண்டது வேறு விடயம்.  ஒரு Copy வாங்கி இன்னும் பத்திரப்படுத்தி வைத்து 

தமிழகத்தின் அனைத்து நடுநிலை , உயர் & மேல்நிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் நடத்தும்   ஆசிரியர்கள் அனைவரும் பயன்

யிற்சிக் கட்டத்


அமைதியாக இருப்பது குழந்தைகளின் இயல்பல்ல 

சர் பெர்சி நன் - கல்வியாளர் )



Thursday, 26 December 2019

10 ஆம் வகுப்புகணக்கு டிப்ஸ் 2019 குங்குமம்

கணக்குத் தேர்வு அணுகுமுறை

தேர்வு என்றாலே பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதும் பயம் தான் , 

இந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு புதிய கணக்குப் பாடப் புத்தகம் என்பதால் பொதுத் தேர்வு குறித்து குறிப்பாக கணக்குப் பாடம் குறித்து மாணவர்களுக்கு கூடுதல் பயம் உருவாகி உள்ளது. வருகின்ற மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் வர இருக்கின்றன.   முழுப் புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடப் பகுதிகளும் தேர்வுக்கான பாடப் பகுதிகளே.

எந்த பயமும் இல்லாமல்மாணவர்களாகிய நீங்கள்  கணக்குத் தேர்வை எவ்வாறு அணுகலாம் என சில பகிர்வுகளை  இங்கு காணலாம். 

இதுவரை கணக்குப் பாடத்தை சரியாகப் படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை , இன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தால் சுலபமாக 75 மதிப்பெண்கள் வரை பெற்று விடும் வழிமுறைகள் கணக்குப் பாடத்தில் உண்டு. புத்தகத்தில் மொத்தம் 8 தலைப்புகள் உள்ளன. அதில் செய்முறை வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளை  விட 4 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. 20 மதிப்பெண்களுக்கு பதிலாக 16 மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளிலும் கவனம் செலுத்தி பயிற்சி செய்தால் 16 மதிப்பெண்கள் முழுமையாகப் பெற்று விடலாம். இதில் வரைபடக் கணக்கில் படம் , அளவுத் திட்டம் , அளவுகள் சரியாகக் குறிக்கப்படுதல் மற்றும் அட்டவணை மதிப்புகள் இவற்றை சரியாகச் செய்தால் 8 மதிப்பெண்கள் பெற முடியும். 

செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம் சரியாக வரைந்தால் 2 மதிப்பெண்களும் உண்மைப் படம் சரியாக வரைந்து அளவீடுகள் சரியாகக் குறித்து பெயரிட்டு முழுமையாக்கினால்  மீதமுள்ள 6 மதிப்பெண்கள், ஆக முழுமையான 8 மதிப்பெண் பெற்று விடலாம். 

ஆனால் கடந்த ஆண்டுகள் போல் தனித்தலைப்புகளில் இவையிரண்டும் வருவதில்லை. வரைபடங்கள் இயற்கணிதம் என்ற தலைப்பிற்குள்ளும் , செய்முறை வடிவியல் என்ற தலைப்பு  வடிவியல் என்ற பாடத் தலைப்பிற்குள்ளும் அடங்கியுள்ளன.

தினந்தோறும் 15 நிமிடங்கள் செலவிட்டு மேற்சொன்ன 2 தலைப்புகளிலும் உள்ள புத்தகக்கணக்குகளை  போட்டுப் பார்த்துப் பயிற்சி செய்தால் பொதுத் தேர்வுக்குள் தயாராகி விடலாம். 

அடுத்து , 8 பாடத் தலைப்புகளிலும் ஒவ்வொரு பாடத் தலைப்பின் இறுதியிலும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் 15- 20 எண்ணிக்கையில்  கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினா - விடை பகுதிகளை தினமும் படித்து , செய்து பார்த்து சிறு தேர்வு போல எழுதி வந்தால் 15 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்று விடலாம். இதுவரை குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 க்கு இவை போதுமானது. ஆனால் இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். 

எளிய பகுதியும், ஜூன் மாதம் முதல் மாணவர்கள் திரும்பத் திரும்ப கவனம் செலுத்தும் பகுதி - உறவுகளும்  சார்புகளும், இதில் எடுத்துக் காட்டு கணக்குகள் , நிரூபணங்கள் ஆகியவற்றைத் திரும்பத் திரும்ப செய்து பார்க்க வேண்டும் . 

அதனைத் தொடர்ந்து மாணவருக்கு எளிதான பகுதியும் மதிப்பெண் பெறக் கூடியதும் அணிகள் , இதில்   மிக எளிமையான பயிற்சிக் கணக்குகளும் எடுத்துக் காட்டுகளும் உள்ளன. இத் தலைப்பில் சற்று பயிற்சி செய்தால்  எளிதில் மதிப்பெண்கள் கூடும். இதுவும் இந்த வருடம் தனித் தலைப்பில் வரவில்லை. இயற்கணிதம் என்ற தலைப்பில் இணைந்து தான் வருகிறது. ஆனால் அதிலுள்ள காரணிகள் , வர்க்க மூலம் , பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ , மீ.சி.ம , பல்லுறுப்புக் கோவைகளின் 

வர்க்க மூலம் கண்டறிதல் ஆகியவை மிக எளிய முறையில் பயிற்சி செய்யக் கூடியவையே. 

அதோடு இரண்டாம் தலைப்பாக வரும் எண்களும் வரிசைகளும் தலைப்பில் ,மட்டுக் கணிதம் , கூட்டுத் தொடர் வரிசை , பெருக்குத் தொடர் வரிசை குறித்த கணக்குகளை உரிய சூத்திரங்களை நினைவில் கொண்டு தொடர்ச்சியாகப் பயிற்சி பெற இந்தப் பகுதி எளிதாகும்.

அடுத்ததாக ஆயத் தொலை வடிவியல் என்ற தலைப்பில் , முக்கோணத்தின் பரப்பு , நாற்கரத்தின் பரப்பு , சாய்வு , இணை கோடு செங்குத்துக் கோடுகள் ,கோட்டின் சமன்பாடுகள் இவற்றைப் பயிற்சி செய்யலாம்  ..

அதோடு அளவியல் தலைப்பில் வளை பரப்பு , கனஅளவு  , மொத்தப் பரப்பு - கூம்பு , உருளை, கோளம் இவற்றில் பயிற்சி செய்து பார்க்கலாம் , இந்தப் பகுதியைப் பொருத்த வரை 23 சூத்திரங்கள் உள்ளன . இவற்றை ஒரு மாணவர் தெளிவாகப் புரிந்து கொண்டு கணக்குகளை செய்து பார்ப்பது எளிய முறையில் மதிப்பெண் பெற வழி வகுக்கும். 

இத் தலைப்பையும் மேற்சொன்ன தலைப்புகளையும் நன்றாகப் பயிற்சி செய்யும் ஒரு மாணவர் எந்தத் தடங்கலும் இன்றி 60 மதிப்பெண்கள் வரைப் பெறலாம்

அடுத்து நிகழ்தகவு , புள்ளியியல் இவ்விரு தலைப்புகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகள்  , பயிற்சிக் கணக்குகளையும் சேர்த்து தயாராகும் போது 70 மதிப்பெண்களைக் கடந்த நிலையில் வெற்றி பெறலாம். 

அடுத்து வடிவியல் தலைப்பு, இதில் தான் செய்முறை வடிவியலும் இடம் பெற்றுள்ளது. , அதோடு பிதாகரஸ் தேற்றம் , தேல்ஸ் தேற்றம் ,எடுத்துக் காட்டுக் கணக்குகள்  , தொடு கோட்டின் நீளங்கள் இதற்கானப் புரிதலும் கணக்குகளும் பயிற்சி செய்ய வேண்டும்.

அடுத்ததாக நிகழ்தகவும் புள்ளியியல் என்ற கடைசித் தலைப்பு எளிதான பகுதி தான். இதிலுள்ள கணக்குகள் தொடர்ந்து செய்து பார்க்கலாம். அடுத்து முக்கோணவியல், இந்தத் தலைப்பை மாணவர் ஏனோ மிகக் கடினமாக உணர்கின்றனர். ஆனால் இயல்பாக அடிப்படை கருத்தை மாணவர் மனதில் புரிய வைத்தால் இதை விட எளியது எதுவுமில்லை என்பர். 

மற்றொன்று ஏற்கனவே இயற்கணிதம் , முக்கோணவியல் , அணிகள் போன்ற தலைப்புகளில் 9 ஆம் வகுப்பில் அடிப்படைப் புரிதலுடன் வருவதால் மிக எளிமையாகக் கணக்குத் தேர்வைக்  கையாளலாம். 

இவ்வாறு ஒரு மாணவர் இனிவரும் டிசம்பர் முதல் மார்ச் வரை 4 மாத காலம் தலைப்பு வாரியாகப் பயிற்சி செய்து வந்தால் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை  எளிதாகப் பெற இயலும். 

மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கணக்குப் பாடத்திற்கு ஒதுக்குவது நல்ல மதிப்பெண் பெற வழி வகுக்கும். ஆம் அந்த நேர உழைப்பு அவர்களுக்குள் வேகத்தையும் தெளிவும் தரும் ,தேர்வை மிக இயல்பாக அணுக முடியும். முதலில் கணக்குப் பாடத்தை விரும்ப வேண்டும். 

ஒவ்வொரு முறை போட்டுப் பார்க்கும் போதும்  சிக்கல் தீரும் , என்றுமே கணக்கை மனப்பாடம் செய்யக் கூடாது. படங்கள் ,குறியீடுகள் இவற்றைப் போட்டுப் பார்த்து சுயமாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும் ,

கணக்கின் மற்றொரு சிறப்பு இப்பாடத்தில் மட்டும் தான் சரிபார்த்தல் செய்ய முடியும் , ஆகவே மாணவர் ஒரு கணக்கை தேர்வு விடைத்தாளில் போட்ட பிறகு அதன் வலப்பக்கத்தில் ஏற்கனவே போட்டுக் கொள்ளும் Rough work பகுதியில் சரிபார்த்தல் போட்டுப் பார்ப்பது நல்லது. தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னரே தான் எத்தனை மதிப்பெண் வாங்குவோம் என தெரிந்து விடும். 

ஒவ்வொரு முறை கணக்கைப் போடும் போதும் 3 விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை , என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்ன கண்டறிய வேண்டும் ? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் ? இந்த மூன்றையும் யோசித்தால் எந்த ஒரு சிக்கலான கணக்கையும் எளிதாகத் தீர்த்து விடலாம். 

வழிகள் தெளிவாகவும் , எண்களை சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும். அளவியல் பகுதி வரும் போது மீ , செ.மீ ,ச.மீ இது போன்ற அலகுகளை மறக்காமல் எழுத வேண்டும் .

பெருக்கல் , வகுத்தல் , சுருக்குதல் செயல்களை ஏற்கனவே கூறியபடி Side work - Rough work என்ற பகுதியில் போட்டுப் பார்த்து தவறில்லாமல் எடுத்து விடைகளை எடுத்து எழுத வேண்டும். 

அடித்தல் ,திருத்துதல் இருக்கக் கூடாது. நேர மேலாண்மையில் பயிற்சி செய்து இருக்க வேண்டும் , கேட்கப்பட்ட வினாக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகப் போடக்கூடாது. தேர்வு வினாத்தாள் கணக்கு எண்ணை விடைத்தாளில் எழுதும் போதும் மாறாமல் எடுத்து எழுத வேண்டும். கணக்கு எண் போடாமல் கணக்கை விடைத்தாளில் செய்யக் கூடாது. 

அளவுகோல் , பாகை மானி இவற்றைப் பயன்படுத்தும் போது கவனமாக மதிப்புகளைப் போட வேண்டும் , பிழை செய்யக் கூடாது. 

இவ்வாறு ஒரு 10 ஆம் வகுப்பு மாணவர் தன்னை சரியான முறையில் பயிற்சி செய்து கொண்டால் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம். 

கணக்கு கடினம் , எனக்கு வராது , என்னால் போட முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களைத் தூர எறிந்து விட்டு கடுமையான பயிற்சி செய்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறலாம். 

கணக்குத் தேர்வைப் பொறுத்தமட்டில் பயமோ பதட்டமோ தவிப்போ  அர்த்தமற்றது. எளிதாகக் கையாளலாம் , இவ்வாறு மாணவர் தங்களை தகவமைத்துக் கொண்டால் கணக்குப் பாடத் தேர்வு மட்டுமல்ல எல்லாப் பாடத் தேர்வுகளுமே அவர்களுக்கு மிக எளிதே

உமா







Friday, 22 February 2019

தேர்வு 5 & 8

தேர்வின் மையம் என்ன ? ஏன் எதிர்ப்பு தோன்றுகிறது ? விவாதிப்போம்

கடந்த 4 நாட்களாக 5 , 8 வகுப்புகளுக்கான தேர்வு பற்றிய எதிர்ப்புக் குரல்கள் முகநூலில் வலம் வருகின்றன .

இந்த வருடம் பொதுத் தேர்வு கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார் கல்வி அமைச்சர் .

சரி , இது இப்படி போகட்டும்  .

மிகச் சிறந்த கல்வி முறை என நாம் கூறும் பின்லாந்து கல்வி முறையில் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா என ஒரு முறை விசாரித்துப் பார்ப்போம் .

அங்கு 7 வயசுல தான் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்கிறாங்க , இங்க மாதிரி இரண்டரை வயதில் பள்ளிக்குள் தள்ளப்படுவதில்லை.

மதிப்பெண் அடிப்படையில் மற்ற குழந்தைகள் ஒப்பிடப்படுவதில்லை. தரப்படுத்தப்படும் தேர்வு முறை இல்லை. ஆரம்பக் கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியில் கிடைக்கும் வெற்றி அல்ல என்று பின்லாந்து கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அப்போ நம் நாட்டு கல்வியாளர்கள் இந்தக் கருத்துகளில் முரண்படுகிறார்களா ????

இங்குள்ள கல்வி ஆராய்ச்சி நிறுவன ( SCERT)  Experts என்ன செய்யறாங்க ? இவர்கள் இதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து இருக்க வேண்டும் அல்லவா ?

கல்வித் துறையில் குழந்தைகள் பிரிவில் , உளவியல் பிரிவில் ஆய்வு முனைவர்கள் முதல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா ??

NCF 2005 தேசியக் கல்விக் கொள்கையின்படி இப்படியான தேர்வுகள் கண்டனத்துக்கு உரியவை .

கல்விக் கொள்கைகள் வழியாகவும் சரி , குழந்தை உளவியல் வழியாகவும் சரி இந்தத் தேர்வு முறை & தேர்ச்சி கான்சப்ட்  என்பது தவறு தான் ....

ஏன் தவறு ?

நமது நாட்டில் எலைட் குடும்பங்கள் ஒரு புறம் இருந்தாலும்  வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குழந்தைகளும் , நடுத்தர வர்க்க குடும்பங்களில் சிலரும் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

இந்தக் குழந்தைகளை தேர்ச்சி இல்லை என அறிவிக்க பல காரணங்கள் பள்ளிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இருக்கும். ஆனால் நிர்வாகம் , என்றுமே தனது பார்வையை எதார்த்த மனநிலையின் பக்கத்திற்கு திருப்பாது.

விளைவு , வீட்டில் படிப்பை பற்றி கவனம் செலுத்த  ஆளில்லாத , பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்படும் குடும்பங்களின் குழந்தைகள் fail என்ற ஒற்றைச் சொல்லால் , பள்ளியின் மொத்த கேலிக்கும் ஆளாக நேரிடும் , தொடர்ச்சி பள்ளியில் இடைநிற்றல் (Drop out)உருவாகும். குழந்தைகள் மகிழ்ச்சி அறவே பிடுங்கப்படும் , குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை உயரும் , சமூகம் மீண்டும் ஒரு தலைமுறை முன் சென்று 30 வருடம் முன்புள்ள சூழல் வர வாய்ப்பு இருக்கு ,

குழந்தைகளின் படைப்பாற்றல் அழியலாம் , மன அழுத்தம் ஆசிரியர்கள் வழியாகக் குழந்தைகளுக்குக் கடத்தப்படலாம் ,
ஆசிரியர்கள் மீண்டும் ஒரு பிரிவில் ஆவணப்படுத்த ( ரெக்கார்டுகள் ) நெருக்கப்படலாம். ஆசிரியர்கள் நிர்வாகத்தை சரிப்படுத்தும் விதமாக போலி ஆவணம் தயாரிக்கும் சூழலுக்குச் செல்லலாம்.

சிறந்த ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் , தலைமை ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படலாம், இதனால்  தேர்வுக்கான விடைகளை கரும்பலகையில் (Board) எழுதிப் போடலாம் ..... (80 களில் இப்படி நடக்கும் )

நோட்ஸ் போடுபவர்கள் பணம் கொழிக்கலாம் , டியூஷன் சென்டர்கள் அதிகமாகலாம் , புத்தக வாசிப்பு ,  விளையாட்டு இப்படியான சிறு சிறு முயற்சிகள் தோல்வி அடையலாம். நீட் தேர்வுக்கு முயற்சி செய்யும் மிகக் குறைந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் செய்யாமல் போகலாம் .

எல்லோரும் தனியார்ப் பள்ளிகளை நாடலாம் .யார் கண்டது ??? அரசுப் பள்ளிகள் அனைத்தும் விரைவில் மூடப்படலாம்.

இப்படி இன்னும் பல ......'லாம் 'கள் உருவாகலாம் .

சரி .. மாற்று என்ன செய்யலாம் ?

பள்ளிகளில்  போலி Records ஐ ஒழிக்கலாம் , அதிகாரிகள் நேரடியாக மாணவரை அணுகி ஆய்வு என்ற பெயரில் இல்லாமல் இயல்பாக கண்காணிக்கலாம்  .

முதல் 2 வகுப்புகளிலேயே எழுதப் படிக்க அடிப்படைத் திறன்களை மொழிப் பாடத்திலும் கணக்கிலும் கொண்டு வர நேரடியாக ஆசிரியர்களை செயல்பட வைக்கலாம் .

மக்களை , பெற்றோரை , SMC ஐப் பயன்படுத்தி கற்பித்தல் சரியில்லை எனில் கேள்வி கேட்க வைக்கலாம் . எவ்வித மறைவும் இன்றி ஒரு வெளிப்படைத் தன்மையை (transparency) பள்ளிக்கும் சமூகத்துக்கும் உருவாக்கலாம். கற்பித்தலை சரியாக எடுத்துச் செல்லாத ஆசிரியரை தண்டித்து அச்சுறுத்தாமல் கண்டித்து வழிகாட்டலாம்.

ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டும் ஈடுபடுத்தி (தேர்தல் பணி செய்யலாம் ) மற்ற பிற எல்லா அலுவலகப் பணிகளிலிருந்தும் விடுதலை செய்யலாம் ,

மாணவரை உண்மையான கற்பித்தலுக்கு ஆட்படுத்தி கற்றலை விளைவிக்கும் ஆசிரியர்களுக்கு  திறன் அடிப்படையில் மட்டும் ஊக்க ஊதியம்(incentive) வழங்கலாம்.

இது போன்ற நடைமுறைகள் சட்டமாக்கப்படலாம் , இவற்றில் எவ்விதமான சமரசமும் இருக்கக் கூடாது. முதலில் கல்வி அதிகாரிகள் நிர்வாக சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே தலையிட்டு பணி செய்யாமல் கல்வி செயல்பாடுகளிலும்  ( academic Side ) தொடர்ச்சியான ஆரோக்கியமான தலையீட்டை ஈடுபடுத்த வேண்டும்.

சங்கங்கள் பரிந்துரையால் (தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ) எந்த சலுகைகளையும் அரசும் கல்வி அதிகாரிகளும் தரக்கூடாது. நிர்ப்பந்தங்களுக்கு பயப்படாமல் தன் அறம் சார்ந்து அனைவரும் இயங்குதல் வேண்டும்.
அப்படியான சூழலில் குழந்தைகளுக்கு தேர்வோ தேர்ச்சி அறிக்கையோ தேவையில்லை.

மகிழ்ச்சியான சுதந்திரமான இயல்பான கற்றல் குழந்தைகளுக்குக்  கிடைக்கும்

பேசுவோம்
உமா

Friday, 12 January 2018

பயிற்சியின் போக்கு

தேவை எதுவோ அதைத் திட்டமிடுங்கள்
###########################

5 வருட இடைவெளிக்குப்  பிறகு , ஒரு பயிற்சியில் பங்கேற்பாளராக அமர்ந்து இருந்தேன். சுற்றிலும் 60 ஆசிரியர்கள் , பெண் ஆசிரியர்களே அதிகம் , 10 பேருக்கும் குறைவாகவே ஆணாசிரியர்கள் , கணக்கு பாடம் தொடர்பான பயிற்சி அது .பல பயிற்சிகளுக்கு மாநில அளவில் ஒருங்கிணைப்பு செய்த அனுபவமும் , பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு முன் கருத்துகள் கலந்துரையாடல் செய்து , பல வெற்றிகளைக் கண்ட அனுபவமும் நிறையக் கற்றுக் கொடுத்திருந்தது ,எனக்கு இந்த அறை சற்று கடினமாக இருந்தாலும் இது தானே நிதர்சனம் , காத்திருந்தேன் எனது முறைக்காக .

வழக்கமான கடவுள் வாழ்த்தோடு கருத்தாளர்கள் ஒரு வித பயத்தை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் பார்வைக்கு வருவார்கள் என்று அடிக்கடி கூறினார். கணக்கு ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல் விளைவுகளை செயல்களின் படி நிலைகளைத் திட்டமிட வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம் , ஆனால் அப்படி ஒரு புரிதலைக் கூட கருத்தாளர்கள் தன் முன் அமர்ந்து இருக்கும் ஆசிரியர்களிடம் பரிமாற்றம் செய்யவில்லை .

ஒரு தலைப்பு -விகிதம் அதை மாணவர்களிடம் புரிய வைப்பதற்கான சில படிநிலைகளைக்  கூறினர். ஆசிரியர்கள் அனைவரும் தொய்வான மனநிலையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

ஒரு கருத்தாளர் வயதில் மூத்தவர் , மற்றொருவர் இளையவர் .... மூத்தவர் வகுப்பு எடுக்கையில் , " எங்களை மாநிலப் பயிற்சியின் போது ,எங்கள எல்லாம் CEO கேட்டாங்க , DE0 வந்தாங்க , அப்படி இருந்தது , ஜென்ட்ஸ் நல்லா பண்ணாங்க எங்களுக்குக் கொடுத்த ட்ரெயினிங்ல , அத சொல்ல சொன்னாங்க , இத சொல்ல சொன்னாங்க என ஒரு மூன்றாம் தர மனிதர்களின் கருத்துகளை இங்குள்ள ஆசிரியர்களுக்குக் கூறும் பணியையே  செய்தார்.

அடுத்து இளையவரின் வகுப்பு ..அவர் நன்றாகவே முயற்சி செய்தார். ஒரு NCERT பயிற்சிக் கட்டகமும்  அனைவருக்கும் தந்து இருந்தனர் . ஒரு intractive Session போல் எடுத்துச் செல்லுங்களேன் என்றேன். அவரும் ஆசிரியர்களை அழைத்தார், ஆனால் ஒருவரும் வருவதாக இல்லை , பார்த்தேன் , நானே எழுந்து சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு சற்று நேரம் பேசினேன்.

இங்குள்ள ஆசிரியர்கள் அனைவருமே நல்ல ஆசிரியர்கள் , யாரும் உங்கள் பணியில் மனதளவில் தொய்வடைந்திடக் கூடாது. ஒரு மலையில் (உம்) நீலகிரியில் வசிக்கும் குழந்தை கடலைப் பார்த்திருக்காது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் குழந்தை மலையை அனுபவித்து இருக்காது , ஆனால் எல்லோருக்குமான பொதுவான பாட நூலே நம்மிடம் உள்ளது.

இந்தக் கட்டகம் கூட டெல்லியில் யாரோ 4 ஆசிரியர்கள் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களால் எழுதி இருப்பர். இதுவே கற்றலின் இறுதியாகாது. இது போல நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மாணவர்கள் 30 எனில் அதில் 10 வகையான மாணவர்கள் இருப்பார்கள் , அவர்களுக்கு ஏற்றபடியான கற்பித்தல் முறையை பொதுப் புத்தகம் தராது. பாடப்பொருள் மேம்பட்ட ஆசிரியர்கள் நீங்கள் , நம் கல்வி முறை தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நெருக்கினாலும் நமக்கே உரிய பிரத்யேக அணுகுமுறையாலேயே வகுப்பறை வெற்றியடைகிறது என்று கூறி ,

எனது வகுப்பறை அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்தேன் , நம் மாணவர்களுக்கு நம் வகுப்பறையைத் திட்டமிடுவது , செயல்படுத்துவது எப்படி என்பதை எனது அனுபவங்களைக் கொண்டு சிலவற்றைப் பகிர்ந்தேன் , இன்றைய அசத்தும் அரசுப் பள்ளி  ஆசிரியர்கள் பற்றியும் கூறினேன் .கல்வி அதிகாரிகள் கேள்வி கேட்பது அவர்களது கடமை , ஆனால் நம் மாணவர்கள் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும் ? நம்மிடம் வரும் குழந்தைகள் வீட்டு சூழல் , கற்றல் திறன் இதெல்லாம் நமக்கு தான் தெரியும் , ஆகவே அதற்கு தக்கபடி சமாளிக்கும் ஆற்றல் தான் அவசியம் . 

தொய்வான மனநிலையில் இருந்த ஆசிரியர்களின்  கண்களில் பிரகாசம் வந்தது. மகிழ்ந்தார்கள் , இடை வேளையில் பார்த்து பாராட்டி மகிழ்ந்தார்கள்  . உண்மையைக் கூறியதாக   அதிசயித்தார்கள்,  மெதுவாக ஒவ்வொருவராக தங்கள் வகுப்பறை அனுபவத்தைப் பகிர்ந்தார்கள்  .அன்றைய பயிற்சி தினம் உள்ளபடியே ஆசிரியர்கள் மனதில் உற்சாகத்தைத் தந்தது.

அந்த இரண்டு நாள் பயிற்சியின் Feed back தந்த பொழுது உண்மையை எழுதித் தந்தேன் , இறுதி வரை பயிற்சியின் நோக்கம் குழப்பத்தை விளைவிப்பதாகவே இருந்தது. வகுப்பறையின் இடைவெளிகளை நிரப்புவதாகப் பயிற்சிகள் இல்லை என்று தந்தேன் , உண்மையைக் கூறுங்கள் , மாற்றத்திற்கான முயற்சிகளாவது தொடங்கட்டும் .

ஒருங்கிணைப்பாளர்களே ,பயிற்சிகளைத் திட்டமிடும் போது ஆசிரியர்களது மனதைத் தொய்வடையும்படி கட்டமைக்காதீர்கள்  , வகுப்பறையில் மாணவர்கள் எவ்வாறு வாய் மூடி ஆசிரியர் சொல்வதையெல்லாம் கேட்டால் வகுப்பறை கற்றல் கற்பித்தல் வெற்றியடையாதோ அதே போலத் தான் பயிற்சிகளும் ,கருத்தாளர்கள் சொல்வதெல்லாம் உள் அமர்ந்திருப்பவர் கேட்க வேண்டுமென்றால் பயிற்சியும் வெற்றி பெறாது. இது  SSA வின்  பயிற்சி கற்றல் விளைவு (Learning out Come)

அனுபவம் தொடரும்
உமா,

Friday, 11 July 2014

ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்

       
         ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்



முன்னுரை:
        

          ‘‘ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
          திண்ணியர்  ஆகப் பெறின் ”-என வள்ளுவர் வகுத்த அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும் வழிகாட்டும் ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கினாலும்,ஒவ்வொரு மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில் பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த பொறுப்பை ஏற்கிறார்.

        எனவே தலைசிறந்த பணியைச் சிறப்பாக முடிக்க ஒவ்வொரு ஆசிரியரும்,ஒவ்வொரு நொடியும் ஒரு ஆராய்ச்சியாளராக செயல்பட்டு தனது ஆராய்ச்சியில் வெற்றி கொள்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வெவ் வகைகளில் தனது ஆராய்ச்சிப் பணியை பரிசீலனை செய்து, பன்முக வெற்றியை சுவீகாரம் எடுக்கிறார், என்பதை இந்தப் பகுதியில் தரம் பிரிப்போம்… 

கற்பித்தல் பணியில் ஆசிரியரின் ஆராய்ச்சி:
        

         ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது-என்ற கூற்றை அனைவரும் அறிவோம்.நம் திண்ணைப் பள்ளிகளும் இன்று நடைமுறையில் இல்லை.நம் சமுதாயம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் வியந்து போவோம்.வெகு காலம் கடந்து இன்னும் களைப்படையாமல் நடக்கிறோம்.
        இன்றைய சூழலில் கல்வியின் அருமை பெருமைகள் நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கல்வியின் மேம்பாடும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சம அளவில் உயர்ந்து நிற்கும் தராசுத் தட்டுகள் போலக் காணப்படும்  இந்த நிலையில்,உயர்ந்த செறிவுமிக்க கல்வியை மாணவச் செல்வங்களுக்குக் கற்றுத்தர வேண்டுமெனில், ஆசிரியர்கள் மிக்க கற்பித்தல் திறன் உடையவராய் இருப்பது சாலச் சிறந்தது.இன்று ஆசிரியர்கள் மிகநல்ல கற்றல் அனுபவங்களைத் தம்மை நம்பியிருக்கும் மாணவருக்கு வழங்க, முக்கியப் பொறுப்பேற்கும் நிலையில் இருப்பதால் எந்தப் பாடங்களைக் கற்பிக்க முனைந்தாலும் விழிப்போடு ஆராய்ச்சிக்கண் கொண்டு செயல்படுகிறார்கள்.

பாடப் பொருளில் ஆசிரியரின் ஆராய்ச்சிப் பணி :
            
         கற்றல் அனுபவங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த பாடப் பொருள் அவசியம்.மாணவர்க்கு அளிக்கப்படும் பாடப் பொருள் செறிவுடையதாகவும்,எளியனவாகவும்,மாணவரின் வயதிற்கும் அறிவு நிலைக்கும் பொருத்தமுடையதாகவும்,மாணவர்களின் மன நிலைக்கு ஏற்றவாறும்,அவனது திறனை மேம்பாடு செய்வதாகவும், அவனது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அமைய வேண்டும்.
           
         மனதில் நம்பிக்கை ஒளியூட்டு வதாகவும் அவனது அறிவுப் பசிக்கு தீனி போடுவதாகவும், அவனிடம் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தோற்றுவிப்பதாகவும்,எந்த ஒரு சிறு செயலையும் அறிவியல் பார்வையோடு  அணுக அவனுக்கு வழிகோலுவதாகவும்,முழு ஆளுமைத் திறனை அவர்களுக்குள் வளர்க்க உறு துணை யாகவும், கருத்துச் செறிவுடனும்,பொருட் செறிவுடனும் உண்மையை மட்டுமே  உள்ளடக்கி யதாகவும் இருந்து ஆழமாகவும், அழகாகவும் மாணவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தால், அந்த ஆசிரியரால்  வழங்கப்படும் கற்றல் அனுபவம் மாணவனை விட்டு எப்போதும் அகலாது.
         
         ஆகவே மேற்கண்ட எல்லா வகைகளிலும் சிறப்பானதொரு பாடப்பொருளை மாணவனுக்கு வழங்க,தனது ஒவ்வொரு கற்பித்தல் நிகழ்விலும் ஆசிரியர் அவரது முயற்சிகளை மாணவருக்கு செயல்களாக வழங்க ஆராய்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆசிரியர் பணி தொடரும்வரை இந்த ஆராய்ச்சியும் தொடருமல்லவா? அன்றேல் மிக நல்ல பாடப் பொருளைத் தராதவர் ஆகிடுவாரன்றோ! எனவே,இதன் மூலம் ஆசிரியர் மாணவர்க்கு ஏற்ற பாடப்பொருளைத் தருவதில் செயல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்பது புலனாகிறது…

பல்வேறு கற்பித்தல்  முறைகளைக் கையாளும் ஆராய்ச்சியாளர்:
         
        எவ்வளவு செறிவுள்ள,அற்புதமான,அறிவு விருத்தி செய்யும் பாடப் பொருளாக இருந்தாலும்,ஆசிரியர் கற்பித்தல் நிகழ்வுகளை சரியான முறையில் அளிக்காவிடில் அங்கே கற்றல் அனுபவம் சிறந்த முறையில் கிடைக்காது அல்லவா?ஆகவே தன்னிடம் பயிலும் அத்துனைக் குழந்தைகளும் முழுமையாகக் கற்றல் அனுபவங்களைப் பெறுவதற்கு,வகுப்பறையில்,கற்பித்தல் நிகழ்வில் எண்ணிலடங்கா கற்பித்தல்-முறைகளைக் கையாண்டு வெற்றி கொள்ளும் ஆராய்ச்சிப் பணியில் ஆசிரியர் ஈடுபடுகிறார்.
         எந்தப் பாடப் பொருளை எந்தக் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி வழங்கலாம் என ஒவ்வொரு ஆசிரியருமே சிந்தித்து, கவனமுடன் வகுப்பறையில் அதைப் பயன்படுத்தி,சரியான, ஏற்ற கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்து கற்பித்தலில் வெற்றி காண்கிறார். எத்தனையோ முறைகளை ஆசிரியர்களாகிய நாம் அன்றாடக் கல்வி கற்பித்தலில் பயன்படுத்துகிறோம்….உதாரணமாக,
·         விரிவாக்க முறை
·         கதை சொல்லல் முறை
·         விதி வருமுறை
·         விதி விளக்கு முறை
·         செய்து-கற்றல் முறை
·         ஒப்படைப்பு முறை……………………..என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா முறைகளையும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்பது இயலாததும், அவசியம் இல்லாத ஒன்றும் ஆகும்.
          அதே நேரத்தில் ஏதாவது ஒரு கற்பித்தல் முறையை அவரவர் வகுப்புச் சூழலுக்கு ஏற்றபடி ஒவ்வொரு கற்பித்தலிலும் ஆசிரியராகிய நாம் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும். அந்தச் சரியான முறையை, தகுந்த வகுப்பறைச் சூழலுக்குப் பயன்படுத்த ஓர் ஆசிரியர் எடுத்துக் கொள்ள முற்படும் ஆராய்ச்சிகளோ ஏராளம்! ஏராளம்!ஆனால் மிகச் சரியான போதித்தல் முறையை ஏற்ற சூழலுக்கு தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் ஆசிரியர் மிகச் சரியான செயலாராய்ச்சியாளர் ஆகிறார்.
           இவ்வாறு கற்பித்தல் களங்களில் கற்பிக்கும் முறைகளை அறிமுகம் செய்து வெற்றி பெறும் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சியாளரே.
             

ஆசிரியர் -மாணவர் நல்லுறவில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி 

           பிரதானமான கற்றல் பொருள் , பிரம்மிப்பூட்டும் கற்பித்தல் முறைகள் மட்டும்  போதுமா ? ஆசிரியரின் ஆராய்ச்சி தொடர்கிறது. உடன் பயணியுங்கள்.கற்றல் அனுபவங்களை பசுமரத்தாணி போல் பதிவிக்க மூளைப்பதிவுகள் மட்டும் போதுவதில்லை.ஆசிரியரின் மனப் பதிவையும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் .ஆசிரியர்கள் எப்போதும் இயல்பாக,இறுக்கமில்லாமல்,இனிய முகத்துடன் ,மாணவரின் பிஞ்சு மனதை கொள்ளை கொள்ளும் நோக்குடன் மகிழ்வு சூழலில் மேற்கண்ட பாடப் பொருளை நல்ல சூழல் வகுத்து வழங்கினால் மாணவரின் மூளைப் பதிவுகள் சற்றுக் கூடுதலாகவே பதிவித்துக் கொள்கின்றன .                        ஆகவே, ஆசிரியர்கள் எந்நாளும்,மாணவர்களை ஆரோக்கியமான நல்லுறவுடன் எதிர்கொண்டு கற்றல் அனுபவங்களை வழங்கும் களத்தில் செயல்பாடுகளை நிகழ்த்தி வெற்றிபெரும் செயலாராய்ச்சியாளராகவேத் திகழ்கின்றனர் என்பது திண்ணம்....

கற்றல் -கற்பித்தல் உபகரணங்களில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி 

         மிகச் செறிவானப் பாடப்பொருள் ,தெளிவான தேர்ந்தெடுத்த கற்பித்தல் முறை,ஆரோக்கியமான ஆசிரிய-மாணவர் நல்லுறவு இவை மட்டுமா?...ஆசிரியர் செயலாராய்ச்சியாளராகப் பணிபுரியும் எஞ்சிய சிலவற்றை இங்கேக் காணலாம்.மாணவர் அறிவுத் திறன் தூண்டப்பட, மாணவர் சிந்தனை வலுப்பெற மேற்கண்ட இவை அனைத்துடன் மாணவரது காட்சிக்குப் புலப்படும் சில உண்மைப் பொருட்களும், மாணவரது கற்பனைக்கு வழிகாட்டும் படக் காட்சிப் பொருட்களும், விளக்கப் படங்களும்,பல்வேறு திரட்டல் பொக்கிஷங்களும்,பட விளக்கப் படங்களும்,கைவினைப்பொருட்களும்,நூலகஅறிவுப்பெட்டகங்களும் ,அறிவியல் ஆராய்ச்சி செய்யும் ஆய்வுக்கூடமும்,புவியியலைப் புரட்டிப் போடும் வரலாற்று வரைபடங்களும் ,வரலாறு படைக்கும் நிகழ்வுகளும் சான்றுகளும் ,இன்றைய சூழலில் internet லிருந்து எடுக்கப்பட்ட செய்திப்படங்களும் ,அரிய செயல்திட்டங்களும் இறுதியாக பாடப் புத்தகமும் அடங்கிய கற்றல்-கற்பித்தலை ...................வலுவூட்டும் உபகரணங்களைக் கையாள்வதிலும் ஆசிரியர்கள் முற்பட்டு ,வெற்றி விளைவு காணும் செயல் ஆராய்ச்சியாளரே  எனில் மிகையாகாது.
          எந்தப் பாடத்திற்கு எவ்விதமான  துணைக்கருவிகளைப் பயன்படுத்தினால் எந்தளவிற்கு கற்றல் அனுபவங்களை மாணவர் அடைகின்றனர் என்பதற்கு,தங்களது  சரியான செயல்பாடுகளால் ஆய்வு செய்யும் மிகப் பெரிய பணியை மேற்கொண்டு கற்பித்தல் களங்களில் பரவ விடும் ஆசிரியர்கள் மிகச் சரியான சாதனங்களைத் தேர்ந்தெடுத்து செயலாராய்ச்சியாளராக  மிளிர்கின்றனர். 

மாணவர் அடைவு-மதிப்பீட்டில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி :

                     கற்றல் நோக்கங்கள் எதிர்பார்த்த விளைவுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளதா?என்பதைச்  சோதிக்க எத்தனை எத்தனை யுக்திகளை ஆசிரியர் செயல்படுத்தி ஆய்வு செய்கின்றனர்?எழுத்துத்தேர்வு, வாய்மொழித்தேர்வு,திறனறிவுத் தேர்வு என மாணவர் அடைவுகளை சோதிக்கப் பயன்படுத்தும்  அடைவுச் சோதனைகள் பல்வேறு....எந்த நிலையில் உள்ள மாணவனும் ,தனது திறனுக்கு ஏற்ப கற்றல் அனுபவங்களைப் பெற்றவனாவான்.எந்த மாணவரும் மற்ற மாணவருக்கு சளைத்தவரில்லை .ஆகையால் ஒவ்வொருவரையும் அவரவர் பெற்றுள்ள கற்றல் அனுபவங்களை  வெளிக் கொண்டுவர எத்தனையோ அடைவுச் சோதனைகளைச் செயல்படுத்தி தனது கற்பித்தலின் பங்கையும் உறுதி செய்து மாணவர் கற்றல் அளவையும் சீர்தூக்கிப் பார்க்கும் ஆசிரியர் ஒரு சிறந்த செயல் ஆராய்ச்சியாளரே ......

குறையறிச் சோதனையில் செயலாராய்ச்சி  நிகழ்த்தும் ஆசிரியர்  :

                      சிறந்த பாடப்பொருள்,தேர்ந்த கற்பித்தல் முறை ,மிகச் சரியான ஆசிரியர் அணுகுமுறை, அத்துணைக்கும் பொருத்தமான கற்றல் உபகரணங்கள் ,கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்யும் முறைகளை வரிசைப்படுத்திய செயல் ஆராய்ச்சியாளரான ஆசிரியர் ....இதோ குறையறி சோதனையில் ஆராய்வு கொள்கிறார்.ஆம்..எந்த மாணவன்/மாணவி ,எதிர்பார்த்த கற்றல் அனுபவங்களைப் பெறவில்லையோ அவரை இனம் கண்டு ,அதற்கானக் காரணத்தை அறிந்து ,பதிலீட்டு முறைகளை நடைமுறையில் பின்பற்றி அந்த மாணவருக்கும் புதியதாகக் கற்றல் அனுபவங்களைத் தரக்கூடிய குறையறிச் சோதனை முறையைப் பயன்படுத்தும் ஆசிரியர் முழுமையான கற்றல் அனுபவங்களை அந்த மாணவர் பெறும்வரை கற்பித்தல் முறைகளை மாற்றி முயன்று தன்னிடம் கற்பித்தலில் குறை இருப்பின் சரி செய்து ,திரும்ப கற்பித்தல் செயல்பாடுகளை வழங்கி ,எத்தனை எத்தனை செயல்களை செய்து ஆய்வில் ஈடுபடும் ஆசிரியர் மிகச் சிறந்த செயல் ஆராய்ச்சியாளர் என்றே கூறலாம்..

மாணவர்-சிறந்தமனிதராக உருவா(க்)கும் பணியில் ஆசிரியரின் செயல் ஆராய்ச்சி  :

                 ஒவ்வொரு மாணவரும்  சமூக அமைப்பில் தன் குடும்பத்திற்கு அடுத்தபடியாக அறிமுகமாகும் ஒரு பொது மையம் -பள்ளியே ,ஆகையால் மாணவரது நடத்தையில் குடும்பம் ,பள்ளி இவற்றின்  பாதிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.பள்ளி என்பதில் பெரும்பங்கு வகிப்பவர் ஆசிரியர்களே .ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரது குணநலன்கள்,பழகும் விதம்,நடத்தை ,அவரின் கற்பிக்கும் முறை இவைகளில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு,தனக்குள் உள்வாங்கி தன்னில் பிரதிபலிக்கின்றான்.ஆகையால் சமூகத்தில் ஒரு மனிதன் உருவாகிறான் என்றால் அதற்கு ஆசிரியர் பேருதவியாய் இருக்கிறார் என்பதில் எள்ளளவில் ஐயமில்லை .எனவே மேற்கண்ட பண்புநலன்களை ஆரோக்கியமான நல்ல வழியில் ஆசிரியர் பெற்று தானே ஒரு கருவியாக செயல்பட்டு மாணவரை இழைத்து இழைத்து மனிதனாக்கும் சிறந்த செயலாராய்ச்சியில் ஈடுபட்டு ஆய்வு செய்பவராய் இருக்கிறார். 

முடிவுரை ;
                    எத்தனை மாணவர் இருந்தாலும் ,அவர்களது கற்கும் திறனில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவருக்கும்  சம நோக்குப் பார்வையுடன் சரியான வழிகளில் அரவணைத்து ,ஒரு சேர எந்த வேறுபாடுகளையும் காட்டாது.கற்பித்தல் செயல்பாடுகளைக்  கொடுத்து, மிகச் சிறந்த கற்றல் அனுபவங்களைக் கொண்டுவர ஒவ்வொரு வினாடியும் தங்களை ஆராய்ச்சியாளராக முனையச் செய்து அழியாத சுவடுகளை மாணவரிடம் ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பொறுப்பாளர் ஆசிரியர்கள்.இவர்கள் தங்களின் அனுபவங்களின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக "செயல் ஆராச்சி"களில் ஈடுபட்டு தங்களைப் பொலிவூட்டிக் கொள்கின்றனர்.
                    பணி அனுபவம் கூடக் கூட செயல் ஆராய்ச்சியின் ஆழமும் ,தெளிவும் ஓங்கி உயர்கிறது.ஆசிரியரது இந்த ஈடுபாட்டால் மாணவன் பட்டைத் தீட்டப்படுகிறான்.இந்தச் சுழற்சி விடாமல் தொடர்கிறது.ஆகையால் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் 
தாங்கள் அறிந்தோ,அறியாமலோ ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலாராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார்கள்  என்பது முழுக்க முழுக்க உண்மை.
            ஆகவே ஆசிரியர் வகுப்பைப் பராமரிப்பவராக மட்டுமின்றி கற்றல்கள ஆய்வாளராக ,மதிபீட்டாளராக ,உடனிருந்து கற்பவராக ,கற்றல் செயல்பாடுகளை அவ்வப்போதே திருத்தம் செய்பவராக ,புதுமைகள் பல புனைபவராக செயல் ஆராய்ச்சியாளராகத் தன்னைத் திறன் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை...சிறிதும் ....!!!!!!!!!!!!!!!


               வாழ்க அவர்களது பணி !
               வளர்க செயலாராய்ச்சிகளின்  கனி ! 
   
                                   வாழ்க பாரதம்!வளர்க  ஆசிரியப்பணி !





















    



























  







      















































  


`